Monday, October 19, 2009

தமிழ் கவிதைகள் டாட் காம்

நண்பர்களே, தீபாவளி வாழ்த்துக்கள். தமிழ் கவிதைகள் டாட் காம் என்ற வலைத்தளம் என்னுடைய சில கவிதைகளை பிரசிரிதுள்ளது. கவிதைகளை படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.tamilkavithaikal.com/index.php?option=com_content&view=article&id=43:2009-10-18-08-18-49&catid=13:2009-08-28-07-50-16&Itemid=2

உங்கள் நண்பன்,வரதராஜன் செல்லப்பா.

Wednesday, October 7, 2009

இது உங்களுடைய பேனாவா?

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?

வங்கியில் வரிசையில் நின்ற
எல்லோரிடமும் கேட்டாகிவிட்டது
இட வலமாய் அசைகின்றன
எல்லா தலைகளும்.


நல்ல பேனா.
நாற்பது ரூபாய் பெரும்.

ஆனால் எடுத்து போக முடியாயது.

போனவாரம் -
ஒரு சிறிய பென்சில் துண்டு
தன்னிடம் வந்ததெப்படிஎன்று
சொல்ல தெரியாத -
நாலரை வயது மகளுக்கு
நான் செய்த உபதேசங்கள்!!

இந்த பேனாவை நான்
என்னுடன்
எடுத்து செல்ல இயலாது.

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?


Tuesday, October 6, 2009

படித்ததில் பிடித்தது....

"நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, தராசும் அரிவாள்மனையுமாக ஒரு மீன் வியாபாரியோ, குடுகுடுப்பைக்காரன் அல்லது வழி தவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வர முடியாத ஒரு விதமான வாழ்வில் நாம் இருக்கிறோம்".
- வண்ணதாசன்

Thursday, October 1, 2009

அரைஆடை முழு மனிதன் !!


Monday, May 4, 2009

இயலாமை..

ப்லொக்கெரில்
எழுதிபோட்ட
இரங்கல் கவிதையோடு
காலையில் பார்த்த
சாலையோர
அநாதை பிணத்தின்
ஆன்மா சாந்தியடைந்தது.....

தாமதமான மனிதாபிமானம்...

நடுச்சாமம் சற்றே நகர்ந்த
அதிகாலைச் சாலையில்
விமானதளம் விரைகையில்
குறுக்காக கிடந்த
அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல்
வண்டியை ஓட்டுனரும்
பார்வையை நானும் திருப்பிய லாவகம்...
ஊர் வந்திறங்கி
வேலை முடித்து
வந்த ஊர் பிரசித்தமெல்லாம்
வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி
வீடு திரும்புகையில் -
காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?

Tuesday, April 14, 2009

கனவை, கனவால் கொல்...

அடர்ந்த இருள்வெளியில்
எதையோப் பற்றிக்கொண்டு
எதன்மேலோ தொற்றிக்கொண்டு
பார்முலா ஒன் வேகத்தில் இதயம் துடிக்க-

பொருளாதாரப் பின்னடைவு
ஆட்குறைப்பு, ஒபாமா......

இது பாறையா, மரமா?
இந்த நிகழ்வு எனக்குப புதிதா?
இதற்கு முன்னர் நேர்த்திருக்கிறதா ?

கையில் பிடித்திருந்த ஏதோ ஒன்று
மரக்கிளையோ பாறைத்துண்டோ
கைநழுவி விழுந்து சிதறிய சத்தம்
வினாடிகள் பல கடந்து செவி தட்ட

தாலிபான், இனப்படுகொலைகள்,
பங்கு சந்தை, ரிஷேஷன்......

வியர்த்த கைகள் மெதுவாய் பிடிதளர்த்த
இந்த பாறையோ மரமோ மலையோ
என்ன எழவோ-
என்ன செய்ய வேண்டும் இப்போது?
இதை ஏற வேண்டுமா இதில் இறங்க வேண்டுமா?

அலறி விழித்த படுக்கை விரிப்பில்
இது விடிகாலை கனவா?
இரவு இன்னும் மிச்சம் இருக்கிறதா?

எத்தனை மணி?

எத்தனை ஆனால் என்ன
இழுத்திப் போர்த்தி
இறைவனைவேண்டி இன்னும் தூங்கு.

அடுத்த கனவாவது
நல்லதாய் வாய்க்கட்டும்.....










Saturday, April 11, 2009

என் கவிதை என்னிடமே இருக்கட்டும்...

நீ
உனக்காக எழுதிய
உன்னுடைய கவிதையை
உன்னிடமே வைத்துக்கொள்.

என்னிடம்
நான் எனக்காக எழுதிய கவிதை
இன்னும் யாராலும் படிக்கப்படாமல்

அப்படியே
கற்போடு இருக்கிறது.

நீ
இதை படிக்க வேண்டுமென்ற
கட்டாயமில்லை.

எழுதியவன் சொல்லவந்ததை
படிப்பவன் -
தவறாகப் புரிந்துகொண்டால் கூட
கவிதை கற்பிழந்து விடுகிறது...

என் கவிதை
என்னிடமே இருக்கட்டும்...




Friday, March 27, 2009

ஒரு கையாலாகதவனின் கனவு....

யாரோ எப்போதோ போட்ட மாலை
வெறும் நாராய் காற்றிலாட
கையில் வாளேந்தி
கட்டபொம்மன்
ஆவேசமாய் நிற்கிறார்.


கண்களின் உருட்டல்
பார்ப்போரை பயமுறுத்துகிறது.


இருட்டியபின்
கட்டபொம்மன் காலடியில்
கஞ்சா விற்கிறார்கள்.



பரத்தை ஒருத்தி
பள்ளிக்கூடப் பய்யனிடம்
பேரம் பேசிக்கொண்டிருக்கிறாள்.


போக்குவரத்துக்காவலர்
மாதக்கடைசி என்றுசொல்லி
மானியம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆணும்மில்லாத பெண்ணுமில்லாத

"இடையினங்கள்"

புதிய தொழில்நுட்பத்தை
கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.



இங்குதான்
போனமாதம்
ஒரு கட்சிக்காரனை
இன்னொரு கட்சிக்காரன்
வெட்டிக் கொன்றான்.



கட்டபொம்மனோ
வழக்கம்போல
வெட்டப்போவதுபோல
வீராப்பாக நிற்கிறார்.
வெட்டுவதாக தெரியவில்லை.



02/08/1994 இல் எழுதியது!

Saturday, October 18, 2008

நேரம்!

மன்னன் ஆணையிட்டான்.

நிழல் விழாத கோபுரம்
ஆளுயர சிவலிங்கம்
ஒரே கல்லில் நந்தி.

சிங்கள அடிமைகளின்
ரத்தம் வியர்வை கண்ணீர்
மூன்றும் கலந்த வண்ணக்கலவை
மன்னனின் கனவை நிஜமாக்கியது.

அவனையும் வாசலில்
சிலையாக வடித்தார்கள்.

காவேரி கண்ணடிதபோதெல்லாம்
மன்னன் கொடுத்த மானிய நிலங்கள்
பொன்னாக விளைந்தது.

மக்கள் தின்றனர்
மாக்களும் தின்றன

லிங்கனார்க்கும்
நந்தியார்க்கும்
நைவைதியம் நடந்தது.

கோவில் வாசலில்
கற்சிலையாக நின்றபடி

கம்பீரமாய் மன்னன்-
பட்டினி கிடந்தான்..

(02/08/1994 இல் எழுதியது... )